மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் | ரஜினியுடன் இணைந்து நடனமாடும் அனிரூத்? | தக் லைப் படத்தின் புதிய அப்டேட் | ரஜினியின் வாழ்க்கை வரலாற்று படத்தை தயாரிக்கும் பாலிவுட் தயாரிப்பாளர்? | ரஜினியின் ‛கூலி' படத்திற்கு நோட்டீஸ் அனுப்பிய இளையராஜா | 'ஒளியை உணர்கிறேன்' : பிரேக்-அப்பிற்குப் பிறகு ஸ்ருதிஹாசன் | தீனா ரீ-ரிலீஸ் : தியேட்டருக்குள் பட்டாசு வெடித்த அஜித் ரசிகர்கள் | கரு முட்டையை பாதுகாத்து வைத்த நடிகை மெஹ்ரின் | அஜித் பிறந்தநாள் - அப்டேட் ஏதாவது வருமா ? | போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு |
புருவத்தால் புயலை கிளப்பிய மலையாள நடிகை பிரியா வாரியர். மலையாளத்தில் தயாராகி வரும் ஓர் அடார் லவ் என்ற மலையாளப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் இடம்பெற்ற "மாணிக்ய மலராய..." என்ற பாடலில் புருவத்தை உயர்த்தியும், கண் சிமிட்டியும் இடம்பெற்ற காட்சிகளில் ஒரே நாளில் புகழின் உச்சியை அடைந்தார்.
இந்த திடீர் புகழால் மகிழ்ந்திருக்கும் நேரத்தில் கூடவே பிரச்னையும் வந்தது. இந்தப் பாடல் தங்களின் மத உணர்வுகளை புண்படுத்துவதாக சில இஸ்லாமிய அமைப்புகள் ஐதராபாத், மும்பை ஆகிய நகரங்களில் வழக்கு தொடர்ந்துள்ளன. இந்த வழக்கில் படத்தின் இயக்குனர், தயாரிப்பாளருடன் பிரியா வாரியர் பெயரும் சேர்க்கப்பட்டிருக்கிறது.
இந்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார் பிரியா வாரியர். அந்த பாடல் வரிகள் திரிக்கப்பட்டு தவறான பொருள் கொள்ளப்பட்டு மலையாள மொழி பாடலுக்கு மலையாள மொழி அல்லாதவர்களால் வழக்கு தொடரப்படுகிறது. இது பாரம்பரியமாக கேரளாவின் மலபார் பிராந்தியத்தில் பாடப்படும் பாடலாகும். கேரளாவில் உள்ள ஒரு கோடிக்கும் அதிகமான முஸ்லீம்கள் 40 வருடங்களாக பாடி வரும் பாடல் இது என்றும், இந்த வழக்கில் தன் மீது நடவடிக்கை எடுக்க கூடாது என்று மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், பிரியா வாரியர் மீது நடவடிக்கை எடுக்க தடை விதித்தது. மகாராஷ்டிரா, ஐதராபாத்தில் தரப்பட்ட புகார்கள் மீது நடவடிக்கை கூடாது என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.