விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் |
சசிகுமார் நடித்த 'சுந்தரபாண்டியன்', உதயநிதி ஸ்டாலின் நடித்த 'இது கதிர்வேலன் காதல், விக்ரம் பிரபு நடித்த 'சத்ரியன்' ஆகிய படங்களை இயக்கிய எஸ்.ஆர்.பிரபாரகன் தனது அடுத்த படத்துக்கான ஸ்கிரிப்ட் எழுதும் பணியில் தீவிரமாக ஈடுழுட்டிருந்தார்.
அண்மையில் ஸ்கிரிப்ட் எழுதும் பணிகள் முடிவடைந்த நிலையில் அவரது படத்தில் ஹீரோவாக நடிக்க விஜய் டிவியில் ஒளிபரப்பான 'கனா காணும் காலங்கள்' மற்றும் 'சரவணன் மீனாட்சி' தொடரில் வேட்டையன் கேரக்டர் மூலம் புகழ் பெற்ற கவினை தேர்வு செய்துள்ளார்.
கவின் கதாநாயகனாக நடித்து விரைவில் வெளியாகவுள்ள படம் 'நட்புனா என்னானு தெரியுமா'. அறிமுக இயக்குநர் ஷிவா அரவிந்த் இயக்கியுள்ள இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன், தனது அடுத்த படத்தின் கதாநாயகன் கவின் என்று தெரிவித்தார்.
விரைவில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட உள்ளது. கவினுக்கு ஜோடியாக நடிக்க முன்னணி கதாநாயகி ஒருவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் எஸ்.ஆர்.பிரபாகரன். அவரை ஒப்பந்தம் செய்த பிறகு படத்தைப் பற்றிய அதிகாரபூர்வமான செய்திகளை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.