ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் |
நடிகர் ரஜினிகாந்த் அரசியலில் களம் காண உள்ள நிலையில் அதுதொடர்பான வேலைகளில் மும்முரமாய் இறங்கி உள்ளார். மாவட்டம் வாரியாக நிர்வாகிகளை நிர்வகித்து வருகிறார்.
இந்நிலையில் காவிரி விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கி உள்ளது. அதில் தமிழகத்திற்கான தண்ணீர் குறைக்கப்பட்டுள்ளது. இது தமிழக விவசாயிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. பல அரசியல் கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில், காவிரி தீர்ப்பு தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் தன் கருத்தை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
அதில், "காவிரி நீர் பங்கீட்டில் உச்சநீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பு, தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேலும் பாதிப்பதாக உள்ளதால் மிகுந்த ஏமாற்றமளிக்கிறது. மறு பரிசீலனை மனு தாக்கல் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்". என்று கூறியுள்ளார்.
இந்த விவகாரத்தில் அரசியல் களம் காண உள்ள கமலும், தீர்ப்பு ஏமாற்றம் அளிப்பதாக தெரிவித்திருக்கிறார்.