போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
துருவங்கள் பதினாறு படத்தின் மூலம் அனைவரையும் வியக்க வைத்த இளம் இயக்குநர் கார்த்திக் நரேன். இப்படத்தை தொடர்ந்து தற்போது நரகாசுரன் என்ற படத்தை இயக்கி உள்ளார். அரவிந்த்சாமி, ஸ்ரேயா, சந்தீப் கிருஷ்ணா, ஆத்மிகா நடித்துள்ளனர். இதன் இறுதிக்கட்ட தொழில் நுட்பப் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளன.
இப்படம் ரிலீஸாகும் முன்னரே கார்த்திக்கின் அடுத்தப்படம் பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. படத்திற்கு நாடக மேடை என பெயரிட்டுள்ளனர். நைட் நாஸ்டால்ஜியா பிலிமோடெய்ன்மெண்ட் பட நிறுவனம் சார்பில் கார்த்திக்கே தயாரிக்கிறார்.
ஒளிப்பதிவு - சுஜித் சரங், இசை- ரோன் ஈத்தன் யோகன், எடிட்டிங் - ஸ்ரீஜித் சரங், கலை - சிவசங்கர், தயாரிப்பு நிர்வாகம் - மணிகண்டன் என்று தன் பரிவாரங்களுடன் களம் இறங்குகிறார் கார்த்திக் நரேன். யாரும் எதிர்பாராத யூகிக்க முடியாத நட்சத்திர கூட்டணியுடன் களமிறங்க உள்ளாராம் கார்த்திக். அதுப்பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.