‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
தமிழ் டப்பிங் கலைஞர்கள் சங்கத் தலைவர் பதவிக்கு நடிகர் ராதாரவி போட்டியிடுகிறார். இதற்காக அவர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். வேட்புமனு தாக்கலுக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராதாரவியிடம், ரஜினி - கமலின் அரசியல் பயணம் குறித்து செய்தியாளர்கள் கேட்டனர்.
அப்போது பேசிய ராதாரவி, ரஜினி எனது நல்ல நண்பர், நல்லவர். அவர் அரசியலுக்கு வர வேண்டாம் என நினைக்கிறேன். சிஸ்டத்தை சரி செய்ய போகிறேன் என்கிறார். கர்நாடகாவில் போய் முதலில் சரி செய்யட்டும். தமிழகத்தை தமிழர்கள் ஆளட்டும் என்றார்.
கமல் பற்றி பேசும்போது, அவர் பெரிய மனிதர். அவர் பேசுவது படித்தவர்களுக்கு மட்டுமே புரியும். காவி, கருப்பு என ஏதோ கலர்கள் பற்றியெல்லாம் பேசுகிறார். எனக்கு புரியவில்லை என்றார்.