ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
தமிழ்த் திரையுலகின் முக்கியமான இயக்குனர்களில் ஒருவர் மறைந்த இயக்குனர் கே.பாலசந்தர். சொந்த படத் தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வந்தார். அவரது இயக்கத்தில் அறிமுகமான நடிகர்கள், நடிகைகள், வளர்த்துவிடப்பட்டவர்கள் இன்று உயரத்தில் இருக்கிறார்கள்.
இயக்குனர் பாலசந்தரின் இரண்டு அலுவலகங்கள் ஏலத்திற்கு வந்துள்ளதாக கடனைக் கொடுத்த வங்கி நாளிதழ்களில் ஏல அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அவரது மனைவி பெயரில் ஒரு அடுக்கு மாடி குடியிருப்பு அலுவலகமும், அவரது மகள் பெயரில் மற்றொரு அடுக்கு மாடி குடியிருப்பு அலுவலகமும் 1 கோடியே 36 லட்ச ரூபாய் கடனை திரும்ப செலுத்தாததால் ஏலம் விடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பாலசந்தரின் கவிதாலயா தயாரிப்பு நிறுவனம் சில வருடங்களுக்கு முன்பாகவே படத் தயாரிப்பு, டிவி தொடர் தயாரிப்பு ஆகியவற்றை நிறுத்திவிட்டார்கள். சுமார் 10 வருடங்களாக எந்த ஒரு படத் தயாரிப்பிலும் அந்நிறுவனம் ஈடுபடவில்லை.
பாலசந்தர் மீதும் அவரது குடும்பத்தார் மீதும் பெரும் மதிப்பும், மரியாதையும் வைத்திருக்கும் ரஜினிகாந்த், கமல்ஹாசன், பிரகாஷ்ராஜ் ஆகியோர் இந்த ஏல விவகாரம் குறித்து ஏதாவது தலையிடுவார்களா என்பதுதான் பாலசந்தர் ரசிகர்களின் ஆர்வமாக உள்ளது. இந்த ஏல விவகாரம் வாட்ஸ்-அப் மூலம் அதிகம் பரவிவருகிறது.