‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
பெங்களூரில் 10வது சர்வதேச திரைப்பட விழா வருகிற 22ந் தேதி தொடங்கி மார்ச் 1ந் தேதி வரை ஒரு வாரம் நடக்கிறது. இதில் 60 நாடுகளைச் சேர்ந்த 200 படங்கள் திரையிடப்படுகிறது. தாய்லாந்து, ஜெர்மனி, லத்தீன் அமெரிக்கா நாடுகளைச் சேர்ந்த படங்கள் அதிக அளவில் திரையிடப்படுகிறது. ஒளிப்பதிவாளர் செழியன் இயக்கிய டு லெட் என்ற தமிழ் படமும், அசோகமித்ரன் ஆவண படமும் திரையிடப்படுகிறது. கர்நாடகாவில் சுட்டுக் கொல்லப்பட்ட பத்திரிகையாளர் கவுரி லங்கேஷின் ஆவணப்படமும் திரையிடப்படுகிறது.
சர்வதேசம், ஆசியா, இந்தியா, கன்னடம் ஆகிய 4 பிரிவுகளில் போட்டியும் நடக்கிறது. இதில் வெற்றி பெறும் படங்களுக்கு மார்ச் 1ந் தேதி நடக்கும் நிறைவு விழாவில் முதல்வர் சித்தராமைய்யா பரிசு வழங்குகிறார். தினமும் திரைப்படம் தொடர்பான கருத்தரங்குகள், விவாத அரங்குகள் நடக்கிறது. விழாவில் வெளிநாடு மற்றும் உள்நாட்டு திரைப்பட கலைஞர்கள் சுமார் 6 ஆயிரம் பேர் பங்கேற்கிறார்கள்.