ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
ஷங்கர் இயக்கத்தில், ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில், ரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமி ஜாக்சன் உள்ளிட்ட பலர் நடிக்கும் '2.0' படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று அறிவித்திருந்தார்கள். ஆனால், அமெரிக்காவில் வழங்கப்பட்ட படத்தின் கிராபிக்ஸ் காட்சிகளின் உருவாக்கப் பணியில் தாமதம் ஏற்படுவதால் ஏப்ரல் மாதம் படம் வெளியாக வாய்ப்பில்லை என்று கடந்த சில நாட்களாகவே செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. அது திரையுலகத்திற்குள் ஏறக்குறைய உறுதியான தகவலாகவே உலா வருகிறது என்கிறார்கள்.
அதனால் தான் பலரும் தற்போது அவர்களது படங்களை ஏப்ரல் மாதத்தில் தைரியமாக வெளியிட முன் வந்துள்ளதாகச் சொல்கிறார்கள். தமிழ்ப் புத்தாண்டு வெளியீடு என்பது திரையுலகத்தைப் பொறுத்தவரை முக்கியமான வெளியீடு. அதன் பின் சுமார் 45 நாட்கள் கோடை விடுமுறை என்பதால் அப்போது வெளியாகும் படங்கள் நன்றாக இருந்தால் பெரிய வசூலைப் பெறும்.
கடந்த வருடம் ஏப்ரல் 28ம் தேதி வெளியான 'பாகுபலி 2' படம் தமிழ்நாட்டில் மட்டுமே 100 கோடியைக் கடந்து வசூல் செய்தது அதற்கு உதாரணம். அதனால்தான், இந்த வருடம் ஏப்ரல் கடைசியில் '2.0' படத்தை வெளியிட திட்டமிட்டிருந்தார்கள். இப்போது '2.0' தள்ளிப் போகும் சூழ்நிலை உருவாகியுள்ளதால், தமிழ்ப் புத்தாண்டிற்கும், அதற்கடுத்த சில வாரங்களுக்கும் மேலும் படங்கள் வெளியாக திட்டமிட்டு வருகிறார்களாம்.
வெங்கட் பிரபுவின் 'பார்ட்டி' படம் ஏப்ரல் 12ம் தேதி வர உள்ளது. கௌதம் கார்த்திக், கார்த்திக், ரெஜினா, வரலட்சுமி நடிக்கும் 'மிஸ்டர் சந்திரமௌலி' படத்தை ஏப்ரல் 27ம் தேதி வெளியிட அறிவிப்பை வெளியிட்டுவிட்டார்கள். விரைவில் இன்னும் சில புதிய படங்களின் அறிவிப்புகள் வெளியாகலாம் என்கிறார்கள்.