போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
கட்சிக்காக உழைக்க வந்துள்ளேன்; பதவிக்காக வரவில்லை, என, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் மகன் உதயநிதி தெரிவித்தார்.
பஸ் கட்டண உயர்வை ரத்து செய்யக் கோரி, மதுரை மாவட்டம், அலங்காநல்லுாரில், தி.மு.க.,வினர் சாலை மறியல் செய்து, கைதாகினர். திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்ட இவர்களை சந்தித்த பின், உதயநிதி கூறியதாவது: மக்களுக்கு ஒரு பிரச்னை என்றால், முதலில் வருவது, தி.மு.க.,வும், அதன் தொண்டர்களும் தான். சிறை நிரப்பும் போராட்டத்தில் பங்கேற்க, எனக்கு விருப்பம் இருந்தாலும், படப்பிடிப்பு காரணமாக பங்கேற்க இயலவில்லை. அடுத்த போராட்டங்களில் கலந்து கொள்வேன்.
கட்சிக்காக உழைக்க வந்துள்ளேன்; பதவிக்காக வரவில்லை. அரசியலுக்கு நான், திடீர் என வரவில்லை. பிறந்ததில் இருந்தே, அரசியலில் தான் இருக்கிறேன். ஆறு ஆண்டுகளாக, தமிழ் பெயர் வைத்த, என் படங்களுக்கு மட்டும் வரி விலக்கு அளிக்கவில்லை. அதன் பெயரும் அரசியல் தான். கமல், ரஜினி அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.