ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
மறைந்த நடிகையர் திலகம் சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு கதையில் உருவாகி வரும் படம் மகாநதி. தமிழில் இப்படம் நடிகையர் திலகம் என்ற பெயரிலேயே வெளியாகிறது. சாவித்ரி வேடத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்க, ஜெமினிகணேசனாக துல்கர்சல்மான் நடிக்கிறார். அவர்களுடன் மோகன் பாபு, சமந்தா, பிரகாஷ்ராஜ் உள்பட பலர் நடிக்கிறார்கள்.
மேலும், இப்படம் மார்ச் 29-ந்தேதி திரைக்கு வரயிருப்பதாக அறிவிக்கப் பட்டிருந்தது. ஆனால் கடந்த இரண்டு நாட்களாக மகாநதி படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டிருப்பதாக டோலிவுட்டில் செய்திகள் பரவி வருகின்றன. ஆனால் இதையடுத்து அப்படத்தின் இயக்குனரான நாக் அஸ்வின் ஒரு செய்தி வெளியிட்டுள்ளார். அதில், மகாநதி படம் குறித்து வெளியான வதந்திகளை நம்ப வேண்டாம். திட்டமிட்டபடி மார்ச் 29-ந்தேதி படம் திரைக்கு வருகிறது என்று செய்தி வெளியிட்டுள்ளார்.