போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
பத்மவிபூஷண் விருது அறிவிக்கப்பட்ட இளையராஜாவுக்கு வாழ்த்துக்கள் குவிந்தன வண்ணம் உள்ளன. திரையுலகினர் மட்டுமல்லாது, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட பல அரசியல் பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
நடிகர் சிவக்குமார், இயக்குநர் வஸந்த், இசையமைப்பாளர் சங்கர் கணேஷ் உள்ளிட்ட ஏராளமான திரைபிரபலங்கள் பலரும் இளையராஜாவின் இல்லத்திற்கு சென்று வாழ்த்து கூறி உள்ளனர். சிவக்குமார் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில்,
பாரத ரத்னாவுக்கு அடுத்த பெரிய விருது பத்மவிபூஷண். 68 ஆண்டுகளில் 100 பேர் இந்த விருது வாங்கியிருந்தால் அதிகம். ராகதேவன் இளையராஜாவுக்கு அந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இல்லை. அந்த விருதுக்கு ராஜாவால் கவுரவம் கிடைத்துள்ளது. பஞ்சு அருணாசலம் அவர்களால் அன்னக்கிளி- படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு கிடைத்த புதையல் அவர். அப்படத்தின் கதாநாயகனாக நான் நடித்தவன் என்பதில் பெருமை கொள்கிறேன்.
50-க்கும் மேற்பட்ட எனது படங்களுக்கு இசையமைத்து படங்களின் வெற்றிக்கு ஆணிவேராக இருந்திருக்கிறார். எனது 100-வது படம் ரோசாப்பூ ரவிக்கைக்காரி , சிந்துபைரவி படங்களின் வெற்றியில் பெரும் பங்கு அவருடையது. தன் வாழ்நாளை இசைக்காகவே அர்ப்பணித்த அபூர்வ கலைஞர். அவரால் கலையுலகும், தமிழகமும் இந்த விருது மூலம் கௌரவிக்கப்பட்டிருக்கிறது. எத்தனை விருதுகள் கொடுத்தாலும் அவர் இசையுலகில் சாதித்ததற்கு அவை ஈடாக முடியாது.