ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் |
நடிகர் கமல்ஹாசன் வருகிற பிப்., 21-ம் தேதி முதல் தனது அரசியல் பயணத்தை ஆரம்பிக்கிறார். தான் பிறந்த ராமநாதபுரம் மாவட்டத்தில், மறைந்த அப்துல்கலாம் நினைவிடத்திலிருந்து இந்த பயணம் துவங்குகிறது. தன்னுடைய பயணத்திற்கு நாளை நமதே என்று பெயரிட்டுள்ளார் கமல்ஹாசன். இந்நிலையில் நாளை நமதே தொடர்பாக கமல் வெளியிட்டுள்ள ஒரு ஆடியாவில் அவர் கூறியிருப்பதாவது...
"நேற்றையும் இன்றையும் ஆய்ந்து அறிந்தால் நாளை நமதே
பார்த்ததைப் பயின்றதைப் பழகி நடந்தால் நாளை நமதே
நிலமும் நீரும் பொதுவெனப் புரிந்தால் நாளை நமதே
எனக்கே எனக்கு என்று முந்தாதிருந்தால் நாளை நமதே
மூத்தோர் கடனை இளையோர் செய்தால் நாளை நமதே
அனைவரும் கூடி தேரை இழுத்தால் நாளை நமதே
சலியா மனதுடன் உழைத்து வாழ்ந்தால் நாளை நமதே
முனைபவர் கூட்டம் பெருகிவிட்டால் நாளை என்பது நமதே, நமதே
கிராமியமே நமது தேசியம் என்றால் நாளை நமதே, நிச்சயம் நமதே
தமிழர், தமிழால் இணைக்கப்பட்டால் நாளை நமதே, நிச்சயம் நமதே"
இவ்வாறு கமல் கூறியுள்ளார்.