‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
காமெடி நடிகரான கருணாஸ் முக்குலத்தோர் புலிப்படை என்ற ஜாதி அமைப்பில் சேர்ந்தார். தன் ஜாதிக்கான பணிகளை செய்து வந்தார். இந்த நிலையில் கடந்த சட்டமன்ற தேர்தலில் தனது ஜாதி அமைப்பு அதிமுகவுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்தார். அதன் பலனாக அவருக்கு திருவாடணை தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தது. வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராகவும் ஆனார்.
ஜெயலலிதா மரணத்தை தொடர்ந்து ஏற்பட்ட அரசியல் மாற்றங்களால் தவித்தார் கருணாஸ். கூவத்தூர் விடுதியில் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கியிருந்தபோது அவர்களை நல்லபடியாக கவனித்துக் கொண்டார். அதன் பிறகு டிடிவி தினகரன் ஆதரவாளராக செயல்பட்டாலும் திமுகவுடன் நல்லுறுவு ஏற்படுத்திக் கொண்டார். எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர் செல்வம் அணியையும் விமர்சிக்கவில்லை.
இந்த நிலையில் அரசியலில் இருந்து விலகப்போவதாக அறிவித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம் மாரம்பாடி கிராமத்தில் உள்ள புனித அந்தோணியார் கோவிலுக்கு வந்த கருணாஸ் அங்கு நிருபர்களிடம் பேசும்போது இதனை தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:
ஜெயலலிதாவின் மரணத்திற்கு பிறகு எல்லாமே மாறிவிட்டது. எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஆட்சியில் அணுகுமுறை சரியில்லை. என் பெற்றோர் என்னை நேர்மையாளனாக வளர்த்து விட்டார்கள். அதனால் என்னால் யாரோடும் அனுசரித்துப்போக முடியவில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளாக என்னால் நேர்மையாக செயல்பட முடியவில்லை. இதனால் அரசியலை விட்டு ஒதுங்கி சினிமாவில் தீவிரமாக கவனம் செலுத்தப்போகிறேன் என்றார்.