தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நெல்சன் | நாக சைதன்யா, பூஜா ஹெக்டேவை இயக்கும் விருபாக்ஷா இயக்குனர் | ஜூன் 13ல் வெளியாகும் ‛இந்தியன் 2' | தெலுங்கிற்கே முன்னுரிமை தரும் 'குபேரா' குழு | ஒரு அப்டேட் கூட வரவில்லை, வருத்தத்தில் அஜித் ரசிகர்கள் | இளம் இசையமைப்பாளர் பிரவீண் குமார் மரணம் | ஏப்ரல் மாதத்திலும் தொடர்ந்த ஏமாற்றம் - 2024 ஏப்ரல் படங்கள் ஓர் பார்வை | ‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் |
சூர்யா, கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள தானா சேர்ந்த கூட்டம் படம் சமீபத்தில் வெளிவந்தது. விக்னேஷ் சிவன் இயக்கி இருந்தார். ஸ்டூடியோ கிரீன் சார்பில் ஞானவேல்ராஜா தயாரித்திருந்தார். இந்தப் படத்தில் "சொடக்கு மேல சொடக்கு போடுது..." என்ற பாடல் இடம்பெற்றுள்ளது. இதனை நாட்டுப்புற பாடகர் அந்தோணி தாஸ் பாடியுள்ளார். இந்த பாடலில் "விரட்டி விரட்டி வெளுக்கத் தோணு, அதிகார திமிரை பணக்கார பவரை தூக்கி போட்டு மிதிக்க தோணுது..." என்ற வரிகள் இடம்பெற்றுள்ளது.
இந்த வரிகள் அரசியல்வாதிகளை மிரட்டுவதுபோல அமைந்துள்ளது. எனவே அந்த வரிகளை நீக்க வேண்டும் என்று அ.தி.மு.நிர்வாகி சதீஷ்குமார் என்பவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் "இந்த பாடல் அரசியல்வாதிகளையும், மிரட்டும் நோக்கிலும், கிண்டல் செய்யும் நோக்கிலும் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே பாடலுக்கு தடை விதிக்க வேண்டும்" என்று குறிப்பிட்டிருக்கிறார். மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் வழக்கை வருகிற 27ந் தேதிக்கு ஒத்திவைத்தது.