‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
பொங்கலுக்கு வெளிவந்த மூன்று படங்களின் உண்மையான நிலவரம் என்ன என்பது இன்று தான் தெரியும். கடந்த ஐந்து நாட்களாகவே விடுமுறை என்பதால் பொழுது போக்கிற்காக தியேட்டர்களுக்குச் சென்றவர்கள் நிறைய பேர். அதனால் தான், மூன்று படங்களைப் பற்றியும் கருத்துகள் பல்வேறு விதமாக இருந்தாலும் பல தியேட்டர்களில் கணிசமாக டிக்கெட்டுகள் விற்றுள்ளன.
இதனிடையே, தெலுங்கில் வெளியான 'அஞ்ஞாதவாசி, ஜெய் சிம்ஹா' ஆகிய நேரடிப் படங்களுடன் சூர்யா நடித்த 'தானா சேர்ந்த கூட்டம்' படம் தெலுங்கில் 'கேங்' என்ற பெயரில் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது. படத்திற்கு நல்ல வரவேற்பு இருப்பதாகவும், ஆனால், வசூல் குறைவாக இருப்பதாகவும் டோலிவுட் வட்டாரங்களில் இருந்து சூர்யாவுக்குத் தகவல் போனது.
உடனடியாக படத்தின் பிரமோஷனுக்காக ஆந்திரா, தெலுங்கானாவில் உள்ள ஐதராபாத், ராஜமுந்திரி, பீமாவரம், எலுரு, விஜயவாடா, ஓங்கோல் உள்ளிட்ட சில ஊர்களில் உள்ள தியேட்டர்களுக்குச் சென்று ரசிகர்களைச் சந்தித்தார். ஒரு ஊரில் கேட்டை எகிறிக் குதித்து ரசிகர்களுடன் கைகுலுக்கினார். இதெல்லாம் தெலுங்கு மீடியாக்களில் செய்தியாக வந்து படத்தின் வசூலையும் எகிற வைத்துள்ளது. சூர்யாவின் பிரமோஷனுக்கு தியேட்டர்காரர்களும், வினியோகஸ்தர்களும் நன்றி தெரிவித்துள்ளார்கள்.
படம் வெளியான முதல் நாளை விட கடந்த இரண்டு நாட்களாக 'கேங்' படத்தின் வசூல் இரண்டு மடங்காகிவிட்டதாம். தெலுங்கில் 'கேங்' படம் லாபத்தைக் கொடுத்துவிடும் என டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.