ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
விஜய்சேதுபதி தற்போது நடித்து வரும் படம் ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன். விஜய் சேதுபதியுடன், கவுதம் கார்த்திக், நிகாரிகா, காயத்ரி, ரமேஷ் திலக், விஜி சந்திரசேகர் நடித்துள்ளனர். ஆறுமுக குமார் இயக்கி உள்ளார். இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில் இடம் பெற்றிருந்த வசனம் இது...
விஜய் சேதுபதி : ராவணன் சீதைய தூக்கிட்டு வந்து கை படாம வச்சிருந்தான். நாம அவனை அரக்கன்னு சொல்றோம். ராமன் சீதையை காப்பாத்தி கொண்டு போயி சந்தேக தீயில போட்டு எரிச்சான் அவனை நாம கடவுள்னு சொல்றோம். இப்ப சொல்லு ராமன் கெட்டவனா? ராவணன் கெட்டவனா?
ராஜ்குமார்: ராமன்தான் கெட்டவன், ராவணன் நல்லவன்
ரமேஷ் திலக்: ராமன் கடவுள்டா, ராவணன்தான் கெட்டவன்
விஜய் சேதுபதி: இந்த கதையில ராமனும் நான் தான் ராவணனும் நான் தான்.
இப்படியாக வசனம் இடம் பெற்றிருந்தது. இந்த வசனத்துக்கு பல்வேறு தரப்பிலிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. இது ராம பக்தர்களின் மனதை புண்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்தது. டீசரில் இடம்பெற்றிருந்த இந்த வசனம் படத்திலும் இடம்பெற்றிருந்தது. "நாம் ஜாலிக்காக படம் எடுக்கிறோம். நாம் எடுக்கிற படம் மற்றவர்களை சந்தோஷப்படுத்த வேண்டுமே தவிர புண்படுத்தக்கூடாது" என்று விஜய் சேதுபதி கூறியதையடுத்து அந்த வசனம் படத்திலிருந்து நீக்கப்பட்டிருக்கிறது. அதற்கு பதிலான வேறு வசனம் சேர்க்கப்பட்டுள்ளது.