ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் |
சமீபகாலமாக அரசியல் சார்ந்த மற்றும் சமூக விஷயங்களை கையில் எடுத்து குரல் கொடுத்து வருகிறார் நடிகர் பிரகாஷ் ராஜ். பெங்களூர் பிரஸ் கிளப் சார்பில் அவருக்கு சிறந்த மனிதர் விருது வழங்கப்பட்டது. இந்த விழாவில் கலந்து கொண்டபின் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
பெங்களூர் அமைதியும், அழகும் நிறைந்த ஊர். ஆனால் அதை கெடுக்க பலரும் முயற்சித்து வருகிறார்கள். அதற்கு பெங்களூர் மக்கள் அனுமதிக்ககூடாது. எனது தோழி கவுரி லங்கேஷ் கொலைக்கு பிறகுதான் நான் அநீதியை எதிர்த்து குரல் கொடுத்து வருகிறேன். எனக்கு அரசியல் ஆசை கிடையாது. ஆனால் என்னை நிர்ப்பந்தம் செய்தால் அரசியலுக்கு வரவும் தயங்க மாட்டேன்.
ரஜினி தனிக்கட்சி தொடங்குவதாக அறிவித்துள்ளதை வரவேற்கிறேன். அவருக்கு ரசிகர்கள் பலம் இருக்கிறது. இது தொண்டர்கள் பலமாக மாறும். ரஜினி அரசியலுக்கு வருவதை அவரது ரசிர்கள் சந்தோஷமாக வரவேற்பதை போன்றே, சக நடிகனாக நானும் வரவேற்கிறேன்.
இவ்வாறு பிரகாஷ்ராஜ் கூறியுள்ளார்.