ஜூனியர் என்டிஆரை இயக்கும் அஜய் ஞானமுத்து? | ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் |
சமீபத்தில் மஸ்கட்டில் நடைபெற்ற தனியார் நகைக்கடை துவக்க விழாவில் கலந்துகொண்டார் அதன் தென்னிந்திய விளம்பர தூதர்களில் ஒருவரான மஞ்சு வாரியர். மேலும் நடிகர்கள் பிரபு, நாகார்ஜுனா, சிவராஜ்குமார் ஆகியோருடன் பாலிவுட் நடிகர் ஷாருக்கானும் கலந்துகொண்டார். இந்த நிகழ்வில் கலந்துகொண்டு விட்டு திரும்பியபின், ஷாருக்கான் குறித்து தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் மஞ்சு வாரியர்.
“சினிமாவிலும் டிவியிலும் மட்டுமே பார்த்துவந்த ஷாருக்கானை இப்போதுதான் முதன்முறையாக நேரில் பார்க்கிறேன்.. ஷாருக் எபெக்ட் என்பதை பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். அதை அன்றுதான் நேரில் உணர்ந்தேன். நான் உங்களுக்கு நெருக்கமானவளாக உணர்கிறேன். நீங்கள் பாடிய பாடலை புத்தாண்டு பரிசாக எடுத்துக்கொள்கிறேன்” என ஒரு ரசிகையின் பரவசத்துடன் குறிப்பிட்டுள்ளார் மஞ்சு வாரியர்.
இந்த நிகழ்வில் மஞ்சு வாரியாரை அருகில் வைத்துக்கொண்டு, ஷாருக்கான் தனது 'தில்வாலே துல்ஹானியா லி ஜயேங்கே' படத்தில் இடம்பெற்ற சூப்பர்ஹிட் பாடலை பாடியதுதான் மஞ்சுவின் இந்த பரவசத்துக்கு காரணம்.