போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
விக்னேஷ் சிவன் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், சூர்யா, கீர்த்தி சுரேஷ் மற்றும் பலர் நடிக்க, ஸ்டுடியோ க்ரீன் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிப்பில் உருவாகி வரும் படம் தானா சேர்ந்த கூட்டம். இப்படத்தை 2018ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியிட உள்ளதாக ஏற்கெனவே அறிவித்துவிட்டார்கள். இந்த நிலையில் படத்திற்கு எதிராக சிலர் சிக்கலை ஏற்படுத்த முயல்வதாக திரையுலகத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட வினியோகஸ்தர் சங்கத் தேர்தலில் கே.ஈ.ஞானவேல்ராஜா போட்டியிட்டதே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது. தேர்தல் தொடர்பாக நடந்த பத்திரிகையாளர் சந்திப்புகளில், பைனான்சியரான அன்புச்செழியனுக்கு எதிராகவும், அவர் ஆதரவாளர்களையும் கே.ஈ.ஞானவேல்ராஜா, கடுமையாகத் தாக்கிப் பேசினார். அது மட்டுமல்ல மதுரை மாவட்ட வினியோகஸ்தர் சங்கத் தேர்தலிலும் போட்டியிடுவோம் என்றும் தெரிவித்தார்.
இதனால், அன்புச்செழியன் கடும் கோபமடைந்திருப்பதாகவும், கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரித்துள்ள தானா சேர்ந்த கூட்டம் படத்தை வெளிவர விடாமல் தடுக்க, அவர் தரப்பில் சில முந்தைய பஞ்சாயத்துகளை வைத்து சிக்கல்களை ஏற்படுத்தத் தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த விவகாரம்தான் தற்போது கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொங்கலுக்கு வரும் படங்களிலேயே தானா சேர்ந்த கூட்டம் படத்திற்குத்தான் அதிக எதிர்பார்ப்பு உள்ளதாம். அப்படிப்பட்ட சூழ்நிலையில் திரையுலகில் அன்புச்செழியன் விவகாரத்தால் பிளவுபட்டு இருக்கும் இரு தரப்பினருக்கும் இடையில் வருங்காலத்தில் பல பிரச்சனைகள் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. அதன் முதல்படியாக தானா சேர்ந்த கூட்டம் படத்தின் வெளியீட்டுப் பிரச்சனை விஸ்வரூபம் எடுக்கும் என்கிறார்கள்.