ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி | புதிய அமைப்பு தொடங்குகிறார் ராகவா லாரன்ஸ் | அப்பாவாக நடிப்பது பெருமை: சமுத்திரகனி | அபிநந்தனாக நடிப்பதே கஷ்டமாக இருந்தது: பிரசன்னா |
15வது சென்னை சர்வதேச திரைப்பட விழா கடந்த 8 நாட்களாக நடந்து வந்தது. இதில் 50 நாடுகளைச் சேர்ந்த சுமார் 150 படங்கள் திரையிடப்பட்டது. தமிழ் படங்களுக்கான போட்டி பிரிவில் 8 தோட்டாக்கள், மாநகரம், அறம், மகளிர் மட்டும், தரமணி, ஒரு கிடாயின் கருணை மனு, கடுகு, குரங்கு பொம்மை, மனுசங்கடா, ஒரு குப்பை கதை, விக்ரம் வேதா, துப்பறிவாளன் ஆகிய 12 படங்கள் போட்டியிட்டன.
இதில் ஒரு கிடாயின் கருணை மனு சிறந்த படமாக தேர்ந்தெடுக்கப்பட்டது. விக்ரம் வேதா படத்திற்கு இரண்டாவது இடம் கிடைத்தது. மாநகரம் படத்திற்கு சிறப்பு நீதிபதிகள் விருது கிடைத்தது. குரங்கு பொம்மை படத்தில் நடித்த பாரதிராஜவுக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது. விஜய் சேதுபதிக்கு அமிதாப்பச்சன் யூத் ஐகான் விருது வழங்கப்பட்டது. இந்த விருதுகளை நிறைவு விழாவில் கே.பாக்யராஜ் வழங்கினார். விஜய் சேதுபதி தனக்கு வழங்கப்பட்ட ஒரு லட்சம் ரூபாய் பரிசுத் தொகையை சர்வதேச திரைப்பட விழாவுக்கே வழங்கினார்.