போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
தமிழ்த் திரையுலகில் பல வெற்றிப் படங்களுக்கு ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய தங்கர்பச்சான், 2002ம் ஆண்டு வெளிவந்த 'அழகி' படம் மூலம் இயக்குனராகவும் ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தினார். அந்தப் படம் அந்த ஆண்டின் மிகச் சிறந்த படங்களில் ஒன்றாக அமைந்தது. தொடர்ந்து, “சொல்ல மறந்த கதை, தென்றல், சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி, பள்ளிக் கூடம், ஒன்பது ரூபாய் நோட்டு” ஆகிய குடும்பப் பாங்கான படங்களை எடுத்தார். அந்தப் படங்களுக்கு அடுத்து அவரது இயக்கத்தில் ஆரம்பமான படம் 'களவாடிய பொழுதுகள்'. பிரபுதேவா, பிரகாஷ்ராஜ், பூமிகா நடித்த அந்தப் படம் 2010ம் ஆண்டிலேயே முடிவடைந்து வெளியீட்டிற்குத் தயாராக இருந்தது. ஆனால், படத்தைத் தயாரித்த தயாரிப்பு நிறுவனம் பல சிக்கல்களால் அந்தப் படத்தின் வெளியீட்டைத் தள்ளிக் கொண்டே போனது.
4 வருடங்களுக்கு முன்பு 2013ம் ஆண்டில் படத்தை வெளியிட முயற்சிகள் நடந்தன. அப்போது நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குனர் தங்கர்பச்சான், நாயகன் பிரபுதேவா, வைரமுத்து ஆகியோர் படம் பற்றி பாராட்டிப் பேசினார்கள். ஆனால், அப்படியும் படம் வெளியாகவில்லை. இப்போது 4 வருடங்களுக்குப் பிறகு 'களவாடிய பொழுதுகள்' படம் டிசம்பர் 29ம் தேதி அன்று வெளியாகும் என்று அறிவித்து, புதிய டிரைலர், காட்சிகளையும் வெளியிட்டுள்ளார்கள்.
மண்வாசனையோடு, குடும்பப் பாங்கான காதல் கதைகளையும் கொடுத்து ரசிக்க வைத்தவர் தங்கர்பச்சான். அப்படிப்பட்ட படங்களை இந்தக் காலத்து ரசிகர்கள் எப்படி ஏற்பார்கள் என்பது புதிர்தான். தாமதமான வெளியீட்டுப் படங்களும் சென்டிமென்ட்டாக பெரிய வரவேற்பையும், தாக்கத்தையும் ஏற்படுத்தியதில்லை. அதையெல்லாம் 'களவாடிய பொழுதுகள்' மாற்றி ஒரு தாக்கத்தை ஏற்படுத்தினால், இப்படி வெளிவராமலேயே இருக்கும் சில படங்களுக்கும் நல்ல விடிவு காலம் பிறக்கும்.