போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
தமிழ்த் திரையுலகத்தில் டிவியிலிருந்து சினிமாவுக்கு வந்தவர்களை ஒரு காலத்தில் ஓரம்கட்டி வைத்திருந்தார்கள். ஆனால், அது கொஞ்சம் கொஞ்சமாக மாறியது. டிவியிலிருந்து வந்தவர்களுக்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு கொடுத்தார்கள். அதன்பின் டிவி, சினிமா என்ற பாகுபாடு முற்றிலும் அழிந்தது. அதை மாற்றியதில் மிக முக்கிய பங்கு வகித்தவர்கள் சந்தானம், சிவகார்த்திகேயன்.
சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ள 'சக்கப் போடு போடு ராஜா' படமும், சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்துள்ள 'வேலைக்காரன்' படமும் அடுத்த வாரம் 22ம் தேதி நேரடியாக மோதலில் இறங்க உள்ளன.
சந்தானம், சிம்பு மூலம் 2004ல் வெளிவந்த 'மன்மதன்' படத்தில் நகைச்சுவைக் கதாபாத்திரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டார். அதன் பின் தொடர்ந்து பல படங்களில் நகைச்சுவைக் கதாபாத்திரத்தில் நடித்து திடீரென கதாநாயகனகவும் மாறினார். தொடர்ந்து சில படங்களில் கதாநாயகனாக நடித்து தோல்வி கண்டவருக்கு கடந்த வருடம் வெளிவந்த 'தில்லுக்கு துட்டு' படம் முதல் வெற்றியைத் தந்தது. தற்போது சந்தானம் நாயகனாக நடித்துள்ள 'சக்கப் போடு போடு ராஜா' படம் அடுத்த வாரம் 22ம் தேதி வெளியாக உள்ளது.
சிவகார்த்திகேயன், தனுஷ் மூலம் '3' படத்தில் அறிமுகப்படுத்தப்பட்டாலும் அவர் நாயகனாக நடித்த 'மெரினா' முதலில் வெளிவந்தது. அடுத்தடுத்து சுமாரான வெற்றிப் படங்களில் நடித்தாலும் 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்தின் மாபெரும் வெற்றி, சிவகார்த்திகேயனை முன்னணி ஹீரோக்களில் ஒருவராக உயர்த்தியது. தொடர்ந்து நாயகனாக நடித்து 'மான் கராத்தே, காக்கிச் சட்டை, ரஜினி முருகன், ரெமோ' என நான்கு வெற்றிகளைக் கொடுத்தவர் சிவகார்த்திகேயன்.
டிவியிலிருந்து முதலில் வந்த சந்தானத்தை விட சிவகார்த்திகேயனின் வெற்றியும் வளர்ச்சியும் சந்தானத்திற்கு ஒரு பொறாமையை ஏற்படுத்தியதாக திரையுலக வட்டாரங்களிலும், டிவி வட்டாரங்களிலும் பேசிக் கொள்வார்கள். அதை நிரூபிக்கும் விதத்தில் அடுத்த வாரம் இருவரது படங்களும் நேரடியாக மோதிக் கொள்ள உள்ளன. இது சிவகார்த்திகேயனின் வளர்ச்சியைப் பொறுத்துக் கொள்ள முடியாத சிலரது வேலை என பரபரப்பாகப் பேசிக் கொள்கிறார்கள். அவர்கள் யார் என்பதை சமீபத்தில் நடந்த ஒரு இசை விழாவில் ஒன்றாக மேடையேறியதை திரையுலகத்தில் உதாரணமாகச் சொல்கிறார்கள்.