ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி | புதிய அமைப்பு தொடங்குகிறார் ராகவா லாரன்ஸ் | அப்பாவாக நடிப்பது பெருமை: சமுத்திரகனி | அபிநந்தனாக நடிப்பதே கஷ்டமாக இருந்தது: பிரசன்னா |
விஜய், அஜீத், சூர்யா என ஒவ்வொரு முன்னணி நடிகர்களின் படங்கள் திரைக்கு வரும் முதல் நாள், ரசிகர்களுக்கு ஒரு காட்சி திரையிடுவது வழக்கம். ஆனால் முதன்முறையாக விஜய் நடித்த தெறி படம், ரசிகர்களுக்கு ஒரு சிறப்பு காட்சி திரையிட்டது போன்று அவரது பெண் ரசிகைகளுக்கும் ஒரு சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. அதாவது, காரைக்குடியில் உள்ள சத்யம் தியேட்டரில் காலை 7மணிக்கு ரசிகைகளுக்கான தெறி படக்காட்சி திரையிடப்பட்டது.
விஜய்யைத் தொடர்ந்து தற்போது சூர்யா நடித்து பொங்கலுக்கு திரைக்கு வரவிருக்கும் தானா சேர்ந்த கூட்டம் படத்தின் சிறப்பு காட்சி ரசிகர்களைப் போன்று ரசிகைகளுக்கும் ஒரு காட்சி திரையிடப்பட உள்ளது. ஆனால் அந்த காட்சி தமிழகத்தில் திரையிடப்படவில்லை. திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தியேட்டரில் அங்குள்ள ரசிகைகளுக்காக சிறப்பு காட்சி திரையிடப்பட உள்ளது. இந்த செய்தியை சூர்யாவின் ரசிகர்கள் இணையதளங்களில் வெளியிட்டு வருகிறார்கள்.