போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
பாலா இயக்கத்தில், ஜோதிகா, ஜிவி.பிரகாஷ் குமார் நடித்துள்ள படம் நாச்சியார். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதில், ஜோதிகா பேசும் கெட்டவார்த்தை ஒன்று சர்ச்சையை கிளப்பியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜோதிகா, பாலா மீது கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி, ஜோதிகா பேசிய வசனத்தால் பாதிக்கப்பட்ட சாட்சிகளின் பட்டியலை தர வேண்டும் என வழக்கு தொடர்ந்த இந்திய குடியரசுகட்சியின் தலித் பாண்டியனுக்கு உத்தரவிட்டு, வழக்கை ஜன., 11-ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.