‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
தயாரிப்பாளர் சங்க விதிகளுக்கு எதிராக நான் செயல்படவில்லை என இயக்குநர் சேரனுக்கு, விஷால் பதிலடி கொடுத்துள்ளார். நடிகர் விஷால், ஆர்.கே.நகரில் தேர்தலில் களமிறங்கி, வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். இதற்கு சேரன் உள்ளிட்ட சில குறிப்பிட்ட தயாரிப்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவியை, அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கூறி உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ஆர்.கே.நகரில் வேட்புமனு தாக்கல் செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஷால்...
மக்களின் பிரச்னைகளை முன்னிறுத்தி, அடிப்படை பிரச்னைகளை கையிலெடுத்து ஆர்கே.நகரில் ஓட்டு சேகரிக்க உள்ளேன். அந்த தொகுதி மக்கள், அடிப்படை வசதிகளை தான் எதிர்பார்க்கின்றனர். அவர்களின் பிரதிநிதியாக இருக்கவே நான் விரும்புகிறேன். நடிகர் என்பதால் தேர்தலில் நிற்க கூடாது என்கிறார்கள். நடிகர் சங்க தேர்தலில் நின்றபோதும், தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் நின்றபோதும் இதே மாதிரி பிரச்னை செய்தார்கள். அதையெல்லாம் மீறி நாங்கள் ஜெயித்தோம்.
இது ஜனநாயக நாடு, சட்டத்தை மீறி நான் எதுவும் செய்யவில்லை. தயாரிப்பாளர்கள் சங்க விதிகளையும் நான் மீறவில்லை. நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கத்தின் பிரச்னைகளை தீர்த்து வருகிறோம்.
இவ்வாறு விஷால் கூறினார்.