‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
அன்புசெழியன் மீது கந்துவட்டி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், முன்ஜாமின் மனுவை வாபஸ் பெற்றுள்ளார்.
சென்னையில், பிரபல இயக்குனர் சசிகுமாரின் அத்தை மகனும், சினிமா தயாரிப்பாளருமான, அசோக்குமார், நவ., 21ல், தற்கொலை செய்தார். தன் மரணத்திற்கு, கோலிவுட்டில் கந்துவட்டி வசூலித்து வரும் பைனான்சியர் அன்புச்செழியனே காரணம் என, கடிதமும் எழுதி வைத்திருந்தார்.
தலைமறைவு
அவரை தற்கொலைக்கு துாண்டியதாக, வளசரவாக்கம் போலீசார், அன்புச்செழியன் மீது வழக்குப்பதிவு செய்தனர். குடும்பத்துடன் தலைமறைவாகி இருப்பதால், அவரை கைது செய்ய, மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. தனிப்படை போலீசார், ஐதராபாத் மற்றும் தேனியில் முகாமிட்டுள்ளனர். இதனிடையே, அசோக்குமார் தங்கி இருந்த அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள, கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர்.
மேலாளர்களிடம் விசாரணை
அதில், அன்புச்செழியனின் மேலாளர்களான, சென்னை, அசோக்நகரைச் சேர்ந்த, முருகசுந்தரம், 50, வளசரவாக்கத்தைச் சேர்ந்த, சாதிக்பாஷா, 49, ஆகியோர், அடிக்கடி வந்து சென்றது தெரிய வந்தது. இருவரிடமும் போலீசார், இரு தினங்களாக கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.
கந்துவட்டி வழக்கு பதிவு
விசாரணையில், அன்புச்செழியன் துாண்டுதலின்படி, இருவரும், அசோக்குமாரிடம், கந்துவட்டி கேட்டு மிரட்டியது தெரிய வந்தது. இதையடுத்து, அன்புச்செழியன் மீது, தற்கொலைக்கு துாண்டியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கை மாற்றி, நேற்று கந்துவட்டி வசூலிப்பு சட்டப்பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அன்புச்செழியன் மற்றும் அவரது மேலாளர்கள் விரைவில் கைது செய்யப்படுவர் என போலீசார் தெரிவித்தனர்.
முன்ஜாமின் மனு வாபஸ்
இதனிடையே முன்ஜாமின் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார் அன்பு செழியன். ஆனால் திடீரென அதை தன் வக்கில் மூலம் வாபஸ் பெற்றுள்ளார்.