‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
தமிழ் சினிமாவில் இந்தக் கால இளைஞர்களை தன் பக்கம் அதிகமாக ஈர்த்த நகைச்சுவை நடிகர்களில் சந்தானம் முதன்மையானவர். ஆனால், அவருக்கும் சிவகார்த்திகேயனைப் பார்த்து ஹீரோவாக வேண்டும் என்ற ஆசை வந்தது. அவர் நாயகனாக நடித்த 'வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம், இனிமே இப்படித்தான்' இரண்டுமே தோல்விப் படங்களாகவே அமைந்தது. 'தில்லுக்கு துட்டு' மட்டுமே அவரைக் காப்பாற்றியது.
அதன் பின் சந்தானம் நாயகனாக நடிக்க ஆரம்பித்த 'சர்வர் சுந்தரம், ஓடி ஓடி உழைக்கணும், சக்கப் போடு போடு ராஜா, மன்னவன் வந்தானடி' ஆகிய நான்கு படங்களில் இரண்டு படங்கள் முடிவடைந்தும் இன்னும் வெளியாகாமல் இருக்கின்றன. மற்ற இரண்டு படங்களை நினைத்த நேரத்தில் படமாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்தப் படங்கள் வெளிவருவதற்கும், படப்பிடிப்பு நடத்துவதற்கும் தடுமாறிக் கொண்டிருக்க, ஐந்தாவதாக மற்றுமொரு புதிய படத்தில் சந்தானம் நாயகனாக நடிக்க உள்ளார்.
தேனாண்டாள் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், ராஜேஷ் இயக்க உள்ள படத்தில்தான் சந்தானம் நாயகனாக நடிக்கப் போகிறார். இப்படத்தின் படப்பிடிப்பை அடுத்த மாதம் ஆரம்பிக்க உள்ளார்களாம். இதனிடையே நீண்ட காலமாக முடங்கிப் போயிருக்கும் 'சர்வர் சுந்தரம்' படத்தை எப்படியாவது வெளியிட்டுவிட வேண்டும் என தயாரிப்பாளர் தரப்பில் முயற்சிகள் எடுத்து வருகிறார்களாம்.