‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
இந்தியாவில் நடைபெறும் மிகப்பெரிய சர்வதே திரைப்பட விழாவான கோவா சர்வதேச திரைப்பட விழா இன்று(நவ., 20) மாலை 4 மணிக்கு டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜி ஸ்டேடியத்தில் தொடங்குகிறது. இது 48வது திரைப்பட விழாவாகும்.
இந்தியன் பனோரமா என்று அழைக்கப்படும் இந்த திரைப்பட விழா இன்று முதல் வருகிற 28ம் தேதி வரை நடக்கிறது. இந்த விழாவில் 82 நாடுகளைச் சேர்ந்த 196 திரைப்படங்கள் திரையிடப்படுகிறது. 10 ஆசிய படங்களின் முன்னோட்ட காட்சிகள், 64 இந்திய படங்களின் முன்னோட்ட காட்சிகள் திரையிடப்படுகிறது. இதுதவிர ஆஸ்கர் போட்டிக்கு சென்ற 28 படங்கள் திரையிடப்படுகிறது. இதில் உலகம் முழுவதிலுமிருந்து இயக்குனர்கள், நடிகர், நடிகைகள் கலந்து கொள்கிறார்கள். 30 பெண் இயக்குனர்கள் கலந்து கொள்வது இந்த ஆன்டின் சிறப்பம்சம்.
சலங்கை ஒலி, சங்கராபரணம், சிப்பிக்குள் முத்து போன்ற படங்களை இயக்கிய கே.விஸ்வநாத்தின் திரைப்படங்களும், ஜேம்ஸ் பாண்ட் திரைப்படங்களும் சிறப்பு திரைப்படங்களாக திரையிடப்படுகிறது. ஈரானிய இயக்குனர் மஜித் மஜிதியின் முதல் திரைப்படமான பியாண்டு தி கிளவுட்ஸ் படமும் சிறப்பு திரைப்படமாக திரையிடப்படுகிறது.
இந்த விழாவில் இந்த ஆண்டுக்கான பிலிம் பெர்சனாலிட்டியாக அமிதாப் பச்சன் தேர்ந்தெடுக்கப்பட்டு கவுரவிக்கப்படுகிறார். விழாவையொட்டி இந்திய மற்றும் சர்வதேச திரைக் கலைஞர் கோவாவில் குவிந்துள்ளார்கள்.