'ஒளியை உணர்கிறேன்' : பிரேக்-அப்பிற்குப் பிறகு ஸ்ருதிஹாசன் | தீனா ரீ-ரிலீஸ் : தியேட்டருக்குள் பட்டாசு வெடித்த அஜித் ரசிகர்கள் | கரு முட்டையை பாதுகாத்து வைத்த நடிகை மெஹ்ரின் | அஜித் பிறந்தநாள் - அப்டேட் ஏதாவது வருமா ? | போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு |
விஜய் டி.வியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் போட்டியில் வெற்றி பெற்றவர் பிரியங்கா. சென்னை செட்டிநாடு பல் மருத்துவக் கல்லூரியில் படித்து வரும் பிரியங்காவுக்கு, பெரிய பின்னணி பாடகியாக வேண்டும் என்பது தான் கனவு. அது இப்போது நிறைவேறிக் கொண்டிருக்கிறது. பக்தி ஆல்பங்களில் பாடி வந்த பிரியங்கா, அதன் பிறகு கச்சேரிகளில் பாட ஆரம்பித்தார். இயக்குனர் பாலாவின் கண்பட்டு சினிமா பாடகியாகவும் ஆனார். அவன் இவன் படத்தில் "ஒரு மலையோரம்..." என்ற பாடலை விஜய் யேசுதாசுடன் இணைந்து பாடினார்.
இளையராஜா இசையில் பாட வேண்டும் என்பது பிரியங்காவின் நீண்ட நாள் கனவாக இருந்தது. அது இப்போது நிறைவேறியிருக்கிறது. அதுவும் இரட்டிப்பு மகிழ்ச்சியுடன். இளையாராஜாவின் இசையில் ஜி.வி.பிரகாசுடன் பாடியிருக்கிறார்.
நாச்சியார் படத்தில் இடம்பெறும் "ஒன்னவிட்டா யாரும் இல்ல எங்கையில் உங்கையச் சேத்து கைரேகை மாத்துது காத்து" என்று தொடங்கும் பாடலை பாடியுள்ளார். இதனை தமிழச்சி தங்க பாண்டியன் எழுதியுள்ளார். பிரியங்கா திரைப்பட பின்னணி பாடகியாக வேகமாக வளர்ந்து வருகிறார்.