‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
ஷங்கர் தயாரிப்பில் சிம்புதேவன் இயக்கத்தில் வடிவேலு ஹீரோவாக நடிக்கும் இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி படத்தின் படப்பிடிப்பு சில நாட்கள் நடைபெற்ற நிலையில் வழக்கம் போல் வடிவேலுவின் டார்ச்சர் எல்லை மீறிப்போனதால் பொறுத்தது போதும் என பொங்கி எழுந்துவிட்டார் அப்படத்தின் தயாரிப்பாளரான இயக்குநர் ஷங்கர்.
வடிவேலு மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்தபோது அதன் மீது நடவடிக்கை எடுக்காமல் இழுத்தடித்திருக்கிறார் விஷால். இதனால் கடுப்பான ஷங்கர் விஷயத்தை கவுன்சில் செயலாளர்களான கதிரேசன், ஞானவேல்ராஜாவின் கவனத்துக்குக் கொண்டுபோனார். நடிகர்கள் மீது கவுன்சிலுக்கு புகார்கள் வந்தால் நான் தலையிட மாட்டேன்.. நீங்களே நடவடிக்கை எடுத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டாராம்.
எனவே விரைவில் வடிவேலுவை பஞ்சாயத்துக்கு அழைத்து ஷங்கருக்கு ஏற்பட்ட நஷ்டத்தை வசூலிக்க இருக்கின்றனர்.