‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்தால் தான், ரசிகர்கள் மனதில் நிரந்தரமாக இடம் பிடிக்கும் என்பதில் உறுதியான நம்பிக்கை வைத்துள்ளார், கார்த்தி. காற்றுவெளியிடையில் ஏற்பட்ட சரிவை, தீரன் அதிகாரம் ஒன்று சரிக்கட்டும் என, நம்புகிறார். இந்த படத்தில், போலீஸ் அதிகாரியாக நடித்து உள்ளாராம், அவர், 1990களில், தமிழகத்தில் நடந்த குற்றச் சம்பவங்களை மையமாக வைத்து, இந்த படத்தின் கதைக்களம் தயாராகியுள்ளதாம்.
நெசவாளர்களுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில், இந்த படம் முழுவதும், பருத்தி ஆடைகளை அணிந்து நடித்துள்ளாராம். 'நெசவாளர்களுக்கு, நம்மால் முடிந்த உதவியை செய்ய வேண்டும் என்பதற்காக, இந்த முயற்சியை செய்துள்ளேன்' என்கிறார், அவர். ஸ்பைடர் படத்துக்கு பின், ரகுல் ப்ரீத்சிங்கிற்கு தமிழில் வெளியாகும் படம் இது என்பதால், அவரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்.