பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி | புதிய அமைப்பு தொடங்கினார் ராகவா லாரன்ஸ் | அப்பாவாக நடிப்பது பெருமை: சமுத்திரகனி | அபிநந்தனாக நடிப்பதே கஷ்டமாக இருந்தது: பிரசன்னா | பார்த்தால் பசிதீரும், பத்ரி, வீரம் - ஞாயிறு திரைப்படங்கள் | சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... |
தமிழ் ரசிகர்களுக்கு பானுமதியை தெரிந்த அளவிற்கு மாதுரி தேவியை தெரியாது. காரணம் 39 படங்களில் நடித்த மாதுரி தேவி சொந்தப் படம் எடுத்து நஷ்டமாகி குறுகிய காலத்தில் சினிமாவை விட்டு ஒதுங்கியவர். ஆனாலும் அவர் படைத்த சாதனைகள் அதிகம்.
சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பு அவர் வட சென்னையில் கிறிஸ்தவ நாடகங்களில் நடித்து வந்தார். ஒரே நாடகத்தில் 3 வேடங்களில் நடிப்பார். ஆரம்பத்தில் வந்த சினிமா வாய்ப்புகளை தவிர்த்த மாதுரி தேவி, பின்னர் ஒப்புக் கொண்டார். கிளாரா மேரி என்ற தனது பெயரை மாதுரி தேவி என்றும் மாற்றிக் கொண்டார்.
1939ல் வெளிவந்த பாண்டுரங்கன் படத்தில் இரண்டாவது நாயகியாக அறிமுகமானார். இரண்டாவது படமான லட்சுமி விஜயம் என்ற படத்தில் அமுதா, குமுதா என இரட்டை வேடத்தில் நடித்தார். கன்னியின் காதலி என்ற படத்தில் கலைமணி, சந்திரிகா, ஆதித்தன் என மூன்று வேடங்களில் நடித்தார். இதில் ஆதித்தன் ஆண் வேடம். 1950ல் வெளிவந்த பொன்முடி படத்தில் ஹீரோ பி.வி.நரசிம்ம பாரதியை கட்டிப்பிடித்து நடித்து புரட்சியை ஏற்படுத்தினார். ஹீரோயின் என்று இல்லாமல் குணசித்திர வேடம், காமெடி, வில்லி, ஒரு பாட்டுக்கு ஆடுதல்என பல தளங்களிலும் மாதுரி தேவி தனது திறமையை காட்டினார்.