போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
ஷங்கர் இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் ரஜினிகாந்த், அக்ஷ்ய் குமார், எமி ஜாக்சன் மற்றும் பலர் நடித்துள்ள '2.0' படத்தின் இசை வெளியீடு கடந்த மாதம் துபாயில் மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அந்த இசை வெளியீட்டின் போது படத்தில் இடம் பெற்றுள்ள மூன்று பாடல்களில் இரண்டு பாடல்களை மட்டுமே வெளியிட்டார்கள்.
மதன் கார்க்கி எழுதிய 'எந்திர லோகத்து சுந்தரியே'.... மற்றும் 'ராஜாளி'...ஆகிய இரண்டு பாடல்கள் மட்டுமே வெளியிடப்பட்டன. மூன்றாவது பாடலான மறைந்த நா.முத்துக்குமார் எழுதிய 'புல்லினங்காள்...' என்ற பாடலை அப்போது வெளியிடவில்லை. அந்தப் பாடலுக்கான இசை வேலைகள் முழுவதுமாக முடியவில்லை என்பதால் அப்போது வெளியிட முடியவில்லை என்றார்கள். விரைவில் அந்தப் பாடலை வெளியிட உள்ளார்களாம்.
அந்தப் பாடல் பற்றி மதன் கார்க்கி கூறுகையில், “புல்லினங்கள்...ரொம்ப அழகான ஒரு பாட்டு. பறவைகள் மேல மனிதன் கொண்ட காதல்தான் அந்த பாட்டு. பறவைகளுக்காக மனிதனோட குரலா ஒலிக்கிற பாட்டு. ரொம்ப அழகான வரிகள், அழகான சொற்கள். முத்துக்குமார் அவர்களோட வரிகள் இந்தப் படத்துல இருக்கிறது கூடுதல் சிறப்பு. இந்தப் படத்துல நானும் பங்கெடுத்துக்கறது மகிழ்ச்சியாக இருக்கு,” எனக் கூறியிருக்கிறார்கள்.
'2.0' படத்தில் நா. முத்துக்குமார் எழுதிய 'புல்லினங்காள்...' பாடல்தான் அவர் எழுதிய கடைசி பாடல் என்ற ஒரு தவறான கருத்து இருக்கிறது. ஆனால், நா.முத்துக்குமார் அதற்குப் பிறகும் சில பாடல்களை எழுதியிருக்கிறாராம். இதை அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.