‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
சமீபத்தில் ஒரு படப்பிடிப்பில் நடித்துக்கொண்டிருந்த கீர்த்தி சுரேஷ், பாறையில் நடந்து வந்தபோது வழுக்கி விழுந்து விட்டதாக செய்தியும், சில போட்டோக்கள் வெளியாகின. அதோடு அவரது காலில் பலத்த அடி பட்டதால் அவர் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்பட்டது. ஆனால், அந்த போட்டோவில் இருப்பது கீர்த்தி சுரேஷ் இல்லை நடிகை லிண்டா என்று இப்போது தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது குஞ்சிரமண்டே குப்பயம் -என்ற மலையாள படத்தில் நடித்த போது அப்பட நாயகியான லிண்டாகுமார் என்பவர்தான் பாறையில் வழுக்கி விழுந்து விட்டாராம். அப்போது அவர் தொடரி படத்தில் கீர்த்தி சுரேஷ் அணிந்திருந்தது போன்ற காஸ்டியூமில் இருந்ததால் அவரை கீர்த்தி சுரேஷ் என்று நினைத்து செய்திகள் வெளியாகி விட்டதாக அப் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.