ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு | பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் |
தீபாவளியன்று வெளியான 'மெர்சல்' திரைப்படத்தில் இடம் பெற்ற 'பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி' வசனங்கள் கடும் சர்ச்சையை ஏற்படுத்தின. அதனால், படத்தை தமிழ்நாடு பாஜக பிரபமுர்கள் கடுமையாக எதிர்த்தார்கள். அதுவே படத்திற்கு மிகப் பெரிய பிரமோஷனைக் கொடுத்து படம் 200 கோடி வசூலைக் கடக்க உதவியது. அந்த வசனங்களை நீக்க வேண்டும் என்றெல்லாம் பேச்சு எழுந்தது, வழக்கும் போடப்பட்டது. பிரச்சனைகள் எழுந்த பின்னும், தமிழில் அந்த வசனங்கள் நீக்கப்படவில்லை.
அந்த வசனங்களால்தான் தெலுங்கிலும் 'மெர்சல்' படத்தின் டப்பிங்கான 'அதிரிந்தி' படத்திற்கு சென்சார் கிடைப்பதில் தாமதம் ஆனது. நேற்று ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் 454 தியேட்டர்களில் 'அதிரிந்தி' படம் வெளியாகியுள்ளது. தமிழில் சர்ச்சையை ஏற்படுத்திய அந்த வசனங்களை தெலுங்கில் 'மியுட்' செய்துவிட்டார்களாம். அதாவது, வடிவேலு பேசிய பணமதிப்பிழப்பு வசனமும், விஜய் கிளைமாக்சில் பேசும் ஜிஎஸ்டி பற்றிய வசனமும், ஒலியை 'கட்' செய்த பிறகே தணிக்கை வழங்கப்பட்டுள்ளதாம். இருந்தாலும், தெலுங்கில் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நேற்று மட்டும் சுமார் 3 கோடி ரூபாய் வசூலித்துள்ள 'அதிரிந்தி' அடுத்த சில நாட்களில் லாபத்தைத் தர ஆரம்பித்துவிடும் என்கிறார்கள். தெலுங்கு டப்பிங் உரிமை 5 கோடி ரூபாய்க்குதான் விற்கப்பட்டுள்ளதாம். அதனால், படம் எதிர்பார்த்த லாபத்தைக் கொடுத்துவிடும் என்கிறார்கள். மொத்த வசூலாக 20 கோடி வரை கிடைத்தால் இந்த வாரம் 'மெர்சல்' படத்தின் மொத்த வசூல், தெலுங்கையும் சேர்த்து 250 கோடியைத் தாண்டிவிடும்.