ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு | பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் |
தீபாவளியன்று வெளியான 'மெர்சல்' திரைப்படம் இன்றுடன் வெற்றிகரமாக மூன்றாவது வாரத்தை முடிக்கிறது. இந்த 20 நாட்களில் சுமார் 240 கோடி வரை இப்படம் வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன . தமிழ்நாட்டில் 'எந்திரன்' படத்தின் வசூலைக் கடந்த 'மெர்சல்' படம் வெளிநாடுகளிலும் சாதனை வசூலை படைத்து அதிக வசூலைப் பெற்ற தமிழ்ப் படம் என்ற சாதனையைப் படைத்துள்ளது.
தமிழில் வெளியாகும் அன்றே இப்படத்தின் தெலுங்கு டப்பிங்கான 'அதிரிந்தி' படம் வெளியாக வேண்டியது. ஆனால், தணிக்கை வாங்க வேண்டியதில் காலதாமதம் ஏற்பட்டதால் பட வெளியீட்டைத் தள்ளி வைத்துவிட்டார்கள். கடந்த வாரம்தான் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கிடைத்தது. அதன் பின் நவம்பர் 9ம் தேதி படம் வெளியாகும் என்று அறிவித்தார்கள்.
ஆந்திரா, தெலுங்கானாவில் சுமார் 400 தியேட்டர்கள் வரை இப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தெலுங்கில் எத்தனை கோடி வசூலாகிறது என்பதைப் பொறுத்து இந்தப் படம் 'பாகுபலி 2' அல்லாத தென்னிந்திய படங்களின் வசூலில் சாதனை படைக்கவும் வாய்ப்புள்ளது. சுமார் 50 கோடி வசூலித்தாலே 300 கோடி ரூபாய் வசூலைத் தாண்டிவிடும். தமிழ் ரசிகர்களைக் கவர்ந்த இந்தப் படம் தெலுங்கு ரசிகர்களையும் கவருமா என்பது நாளை தெரிந்துவிடும்.