‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
தமிழ்த் திரையுலகத்தில் தற்போது இருக்கும் நகைச்சுவை நடிகர்களில் முன்னணியில் இருப்பவர் சூரி. தற்போது புதிதாக ஓட்டல் ஒன்றை மதுரையில் திறக்க உள்ளார். பொதுவாக, நடிகர்கள் மார்க்கெட்டில் இருக்கும் போதே ஏதாவது ஒரு தொழிலைத் தொடங்குவார்கள்.
சூரி, அவருடைய குடும்பத்தினருக்காக ஓட்டல் திறக்க உள்ளாராம். மதுரையில் அவருடைய குடும்பத்தினர் அனைவரும் கூட்டுக் குடும்பமாக வசித்து வருகிறார்கள். அவரது நெருங்கிய உறவினர்களின் குழந்தைகள் பலரையும் சூரி தான் படிக்க வைத்து வருகிறார்.
சூரி நாளை மதுரையில் ஆரம்பிக்க உள்ள ஓட்டலை நடிகர் சிவகார்த்திகேயன் திறந்து வைக்க உள்ளார். சிவகார்த்திகேயன், சூரி கூட்டணி 'வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன்' ஆகிய படங்களில் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. சூரி கேட்டுக் கொண்டதற்கிணங்க அவருக்காக மதுரைக்கு வந்து ஓட்டலைத் திறந்து வைக்க உள்ளார் சிவகார்த்திகேயன்.