ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் |
நகுல் திறமையான நடிகராக இருந்தாலும், அவரது நடிப்பில் வெளியான படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் வரவேற்பு இல்லாத காரணத்தினால் கண்டு கொள்ளப்படாமலே போய்க் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் நகுல் நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் படம் 'செய்'.
விரைவில் ரிலீசாகவிருக்கும் இந்த படத்தின் சென்னை விநியோக உரிமையை ஜாஸ் சினிமாஸ் நிறுவனம் வாங்கியிருக்கிறது. இந்த படத்தை தொடர்ந்து 'பள்ளி பருவத்திலே' படத்தின் சென்னை, செங்கல்பட்டு விநியோக உரிமையையும் வாங்கியுள்ளது ஜாஸ் சினிமாஸ் நிறுவனம்.
வாசுதேவ் பாஸ்கர் இயக்கியுள்ள 'பள்ளி பருவத்திலே' படத்தில் இசை அமைப்பாளர் சிற்பியின் மகன் நந்தன் ராம் கதாநாயகனாக நடித்துள்ளார். 'பள்ளி பருவத்திலே' படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தமிழகம் முழுக்க வெளியிடுவதாக இருந்தது. ஆனால் இப்போது பள்ளிப்பருவத்திலே படத்தை தமிழகம் முழுக்க வெளியிடும் முயற்சியிலிருந்து பின்வாங்கிவிட்டது.
இந்த சூழலில் தான் 'பள்ளி பருவத்திலே' படத்தைப் பற்றிக் கேள்விப்பட்ட ஜாஸ் சினிமா, சென்னை, செங்கல்பட்டு விநியோக உரிமையை வாங்கியுள்ளது. சசிகலாவின் குடும்ப நிறுவனம் என்று சொல்லப்படும் ஜாஸ் சினிமா, இதுவரை பெரிய பேனர், முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கும் படங்களை மட்டுமே வாங்கி வெளியிட்டு வந்தது.
தற்போது அரசியலில் காட்சிகள் மாறிவிட்டதால், இப்போது செய், பள்ளி பருவத்திலே போன்ற சிறிய படங்களையும் ஜாஸ் சினிமாஸ் வாங்கி விநியோகம் செய்ய ஆரம்பித்துள்ளது.