‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
அட்லீ இயக்கத்தில் விஜய், சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் மற்றும் பலர் நடித்துள்ள 'மெர்சல்' படம் வெளிவந்து பத்து நாட்கள் ஆகிவிட்டது. எதிர்பார்த்ததை விடவும், எழுந்த சர்ச்சைகளின் காரணமாக படம் தொடர்ந்து நல்ல வசூலைப் பெற்று வருகிறது. இன்றோ அல்லது நாளையோ 'எந்திரன்' படத்தின் தமிழ்நாட்டு வசூலை 'மெர்சல்' படம் முறியடித்து விடும் என்கிறார்கள்.
'எந்திரன்' படம் தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 108 கோடியை வசூலித்துள்ளது. இந்தத் தொகையை 'மெர்சல்' கடந்தாலும் தமிழ்நாட்டு வசூலைப் பொறுத்தவரையில் தற்போதைக்கு இரண்டாவது இடத்தில்தான் இருக்கும். 'பாகுபலி 2' படம் சுமார் 120 கோடி ரூபாய் வசூலித்து முதலிடத்தில் உள்ளது. இந்தத் தொகையையும் 'மெர்சல்' படம் முழுவதுமாக ஓடி முடிக்கும் போது கடந்து விடும் என கோலிவுட் வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள்.
உலகம் முழுவதும் 'மெர்சல்' படத்தின் வசூல் விரைவில் 200 கோடியைக் கடந்துவிடும் என்றும் அவர்கள் மேலும் சொல்கிறார்கள்.