ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழில் வசந்தபாலன் இயக்கத்தில் வெளியான 'அரவான்' படத்தில் தன்ஷிகா தவிர இன்னொரு முக்கியத்துவம் வாய்ந்த வேடத்தில் நடித்தவர் தான் மலையாள நடிகை அர்ச்சனா கவி. மலையாள சின்னத்திரையில் ஸ்டாண்ட் அப் காமெடியனாக அபீஸ் மேத்யூ என்பவரை கடந்த வருடம் இவர் திருமணம் செய்துகொண்டார்.
இந்த அபீஸ் மேத்யூ சின்னத்திரையில் நடத்தி வரும் 'சன் ஆப் அபிஸ்' என்கிற காமெடி ஷோ ரொம்பவே பிரபலம். சினிமாவில் உள்ள வி.வி.ஐ.பிக்களை அழைத்து வந்து அவர்களை வயிறு வலிக்க சிரிக்க வைத்து அனுப்பவது தான் இந்த நிகழ்ச்சியின் ஹைலைட்.
இவரது நிகழ்ச்சிக்கு யூடியூப்பில் மட்டும் நான்கு லட்சத்திற்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். ஒவ்வொரு நிகழ்ச்சியையும் இரண்டு மில்லியனுக்கும் குறையாத பார்வையாளர்கள் பார்த்து ரசிக்கின்றனர். அப்படித்தான் சில தினங்களுக்கு முன் இந்த நிகழ்ச்சியின் புதிய எபிசோட் ஒன்றில் துல்கர் சல்மானையும், பாலிவுட் குயீன் வித்யாபாலனையும் பங்கேற்க வைத்து நிகழ்ச்சியை நகைச்சுவையாக கொண்டு சென்றதுடன், பங்கேற்ற இருவருக்கும் வித்தியாசமான அனுபவத்தையும் கொடுத்துள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டது, அதிலும் வித்யாபாலனுடன் இணைந்து பங்கேற்றது புதிய அனுபவமாக இருந்தது என்பதையும், தான் இதுவரை கலந்து கொண்ட ஷோக்களில் இது புது மாதிரியாக இருந்தது என்பதையும் துல்கர் சல்மான் தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டு அபீஸ் மேத்யூவை பாராட்டியுள்ளார்.