‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
விஜய், நித்யா மேனன், சமந்தா, காஜல் அகர்வால் மற்றும் பலர் நடித்து நேற்று தமிழில் வெளிவந்த 'மெர்சல்' படம் இன்று தெலுங்கில் வெளியாவதாக இருந்தது. 'அதிரிந்தி' எனப் பெயரிடப்பட்ட இந்தப் படம் தெலுங்கிலும் நல்ல விலைக்கு விற்கப்பட்டது. ஆனால், கடைசி நேர சென்சார் பிரச்னையால் தமிழ்ப் படமே நேற்று குறிப்பிட்டபடி வெளிவருமோ வராதோ என்ற சூழ்நிலையே செவ்வாய்க்கிழமை வரை நீடித்தது. அதனால், தமிழ்ப் பட பிரச்சனையை மட்டும் அவசரமாக தீர்த்து முடித்தார்கள்.
தெலுங்கிலும் அதே சென்சார் பிரச்னை இருந்ததால் தமிழில் நீக்கப்பட்ட சில காட்சிகளை தெலுங்கில் நீக்குவதற்கு கால தாமதம் ஏற்பட்டுள்ளது. அதனால், படம் திட்டமிட்டபடி இன்று ஆந்திரா, தெலுங்கானாவில் வெளியாகவில்லை. அங்கு அடுத்த வாரம்தான் வெளியாகும் எனத் தெரிகிறது. இருந்தாலும் அது பற்றி இன்னும் அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களில் மட்டுமே தற்போது 'மெர்சல்' வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது. கர்நாடகாவில் நேற்று கன்னட அமைப்பினர் பிரச்சனை செய்ததால் 'மெர்சல்' காட்சிகள் நிறுத்தப்பட்டுள்ளது. ஆந்திரா, தெலுங்கானாவில் இன்று வெளியாகாததால் முதல் சில நாட்களுக்கு படத்தின் மொத்த வசூலில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.