ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி | புதிய அமைப்பு தொடங்குகிறார் ராகவா லாரன்ஸ் | அப்பாவாக நடிப்பது பெருமை: சமுத்திரகனி | அபிநந்தனாக நடிப்பதே கஷ்டமாக இருந்தது: பிரசன்னா |
அக்குபஞ்சர் வைத்தியராக இருந்து சினிமா நடிகர் ஆனவர் டாக்டர் சீனிவாசன். சென்னையில் பல இடங்களில் அக்குபன்ஞர் மருத்துவமனை நடத்தி வரும் இவர் மீது ஏற்கெனவே நிறைய பண மோசடி புகார்கள் வந்தது. பல வழக்குகளும் நடந்து வருகின்றன. சிறைக்கு செல்வதும், ஜாமினில் விடுதலையாகி சினிமாவில் நடிப்பதுமாக இருந்து வருகிறார். இந்த நிலையில் நேற்று சென்னை, புதுவண்ணாரப்பேட்டையை சேர்ந்த தயாநிதி என்ற இளைஞர் வண்ணாரப்பேட்டை போலீசில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில் அவர் கூறியிருப்பதாவது:
நான் சினிமாவில் நடிப்பதற்கு வாய்ப்பு தேடி பல இடங்களில் அலைந்தேன். அப்போது நடிகர் சீனிவாசனுடன் எனக்கு தொடர்பு ஏற்பட்டது. அவர் சினிமாவில் நடிக்க வாய்ப்பு பெற்று தருவதாக உறுதியளித்தார். அதை நம்பி அவரிடம், நான் ரூ.4 லட்சத்து 16 ஆயிரம் கொடுத்தேன். ஆனால், அவர் இதுவரை எனக்கு சினிமா வாய்ப்பு பெற்று தரவில்லை. மேலும் அவரை நேரில் பார்க்க சென்றால் பார்க்க முடிவதில்லை. என்னிடம் பணத்தை வாங்கிக்கொண்டு அவர் மோசடி செய்து விட்டார். எனவே இதுகுறித்து போலீசார் நடவடிக்கை எடுத்து, சீனிவாசனிடம் இருந்து எனக்கு சேர வேண்டிய பணத்தை பெற்றுத்தர வேண்டும். இவ்வாறு அவர் புகார் மனுவில் கூறியுள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.