தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நெல்சன் | நாக சைதன்யா, பூஜா ஹெக்டேவை இயக்கும் விருபாக்ஷா இயக்குனர் | ஜூன் 13ல் வெளியாகும் ‛இந்தியன் 2' | தெலுங்கிற்கே முன்னுரிமை தரும் 'குபேரா' குழு | ஒரு அப்டேட் கூட வரவில்லை, வருத்தத்தில் அஜித் ரசிகர்கள் | இளம் இசையமைப்பாளர் பிரவீண் குமார் மரணம் | ஏப்ரல் மாதத்திலும் தொடர்ந்த ஏமாற்றம் - 2024 ஏப்ரல் படங்கள் ஓர் பார்வை | ‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் |
விஜய் படங்கள் ஒவ்வொரு முறை வெளிவரும் போதும் ஏதாவது ஒரு பிரச்சனை வருவது வழக்கமாகிவிட்டது. அக்டோபர் 18ம் தேதி தீபாவளிக்கு 'மெர்சல்' வெளிவரும் என்று எப்போதே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்னும் சுமார் 40 மணி நேரங்களே உள்ள நிலையில் படத்தின் வெளியீடு குறித்து அதிகாரப்பூர்வமாக உறுதி செய்ய முடியாத நிலையில் தயாரிப்பு நிறுவனம் உள்ளதாகத் தெரிகிறது.
விலங்குகள் நல வாரியம் தடையில்லாச் சான்றிதழ் வழங்கிய பிறகுதான் திரைப்படத் தணிக்கைக் குழுவினர் படத்திற்கு சான்றிதழ் வழங்குவார்கள். அடுத்து கேளிக்கை வரி குறைப்பிற்கான அரசாணையும், புதிய டிக்கெட் கட்டணங்கள் குறித்த அரசாணையும் தியேட்டர்காரர்கள் வசம் கிடைத்த பிறகே அனைத்து தியேட்டர்களிலும் முன்பதிவு ஆரம்பமாக உள்ளது.
இந்த விஷயங்களை அனைத்தும் முடிய இன்னும் சில மணி நேரங்கள் ஆகும் எனத் தெரிகிறது. எப்படியும் இன்று இரவுதான் படத்திற்கான முன்பதிவை பெரும்பாலான தியேட்டர்கள் ஆரம்பிக்க உள்ளன. இதனால், விஜய் ரசிகர்கள் தவிப்பில் உள்ளனர். தீபாவளி அன்றே படத்தைப் பார்க்க வேண்டும் என்று ஆவலில் உள்ள பல ரசிகர்கள் தியேட்டர்கள் வாசலில் காத்துக் கிடக்கிறார்கள்.