போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
சூர்யா, கீர்த்தி சுரேஷ் நடிக்கும் தானா சேர்ந்த கூட்டம் படத்தின் படப்பிடிப்பு தற்போது தஞ்சாவூர் பகுதியில் நடந்து வருகிறது. தஞ்சையை அடுத்த திருவையாறு காவிரி படித்துறையில் பாடல் காட்சிகள் படமாக்க முயன்றபோது புரோகிதர்கள் தடுத்து நிறுத்தினார்கள்.
திருவையாறு காவிரி படித்துறையில் பக்தர்கள் புனித நீராடுவார்கள். முன்னோர்களுக்கு திதி கொடுத்தல் உள்ளிட்ட சடங்குகள் நடக்கும். தினம்தோறும் சுமார் 50 புரோகிதர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள். நேற்று தானா சேர்ந்த கூட்டம் படத்தின் குழுவினர் காவிரி படித்துறைக்கு வந்து படப்பிடிப்பு நடக்க இருக்கிறது. அதற்கான அனுமதி பெற்றிருக்கிறோம். நீங்கள் எழுந்து செல்லுங்கள் என்று புரோகிதர்களை விரட்டி உள்ளனர். இதையடுத்து புரோகிதர்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
"காவிரி படித்துறை புனிதமானது, இங்கு சடங்குகளுக்குத்தான் முன்னுரிமை தர வேண்டும். படப்பிடிப்புக்கு அனுமதிக்க முடியாது மீறினால் நாங்கள் மறியல் போராட்டம் நடத்துவோம்" என்று கூறியிருக்கிறார்கள். இதனால் போலீசார் படப்பிடிப்பு குழுவினரிடம் "நீங்கள் அனுமதி பெற்றிருந்தாலும் இப்போது படப்பிடிப்பு நடத்த முடியாது. சடங்குகள் நடக்காத நாளில் வாருங்கள்" என்று கூறி படப்பிடிப்பு குழுவினரை திருப்பி அனுப்பினார்கள்.