தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நெல்சன் | நாக சைதன்யா, பூஜா ஹெக்டேவை இயக்கும் விருபாக்ஷா இயக்குனர் | ஜூன் 13ல் வெளியாகும் ‛இந்தியன் 2' | தெலுங்கிற்கே முன்னுரிமை தரும் 'குபேரா' குழு | ஒரு அப்டேட் கூட வரவில்லை, வருத்தத்தில் அஜித் ரசிகர்கள் | இளம் இசையமைப்பாளர் பிரவீண் குமார் மரணம் | ஏப்ரல் மாதத்திலும் தொடர்ந்த ஏமாற்றம் - 2024 ஏப்ரல் படங்கள் ஓர் பார்வை | ‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் |
சூப்பர் ஸ்டார் ரஜினி, எமி ஜாக்சன், அக்ஷய்குமார் நடிக்கும் 2.ஓ படத்தின் பணிகள் இறுதிக் கட்டத்தை நெருங்கி விட்டது. ஷங்கர் இயக்கும் இந்தப் படத்தை லைக்கா நிறுவனம் ரூ.400 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கிறது. ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார், நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் மொழிகளில் தயாராவதோடு 3டி தொழில்நுட்பத்திலும் தயாராகிறது. 3டி தொழில்நுட்பம் படத்தில் எப்படி கையாளப்படுகிறது என்பது குறித்த ஒரு மேக்கிங் வீடியோ ஒன்றை லைக்கா நிறுவனம் வெளியிட்டது.
இந்த வீடியோவில் ரஜினி கூறியிருப்பதாவது : இயக்குனர் ஷங்கர் இந்தப் படத்தின் கதையை எழுதும்போதே இதை 3டியில் உருவாக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் தான் எழுதியிருக்கிறார். என்னுடைய ஓப்பனிங் சீன் 3டியில் எப்படி வருகிறது என்பதை பார்த்தேன். மெய்மறந்து போனேன். அது ஒரு பிரமாண்ட அனுபவம். இதற்காக ஷங்கரை பாராட்டுகிறேன். ஹாலிவுட்டின் 3டி படங்களுக்கு எந்த விதத்திலும் சளைத்த படம் அல்ல இது. மக்களின் அனுபவம் எப்படி இருக்கும் என்பதை பார்க்க நானும் காத்திருக்கிறேன் என்றார்.
இயக்குனர் ஷங்கர் கூறியிருப்பதாவது : பார்வையாளர்களுக்கு திரைப்படத்துக்குள் பயணிக்கிற உணர்வை 3டி தொழில்நுட்பம் ஏற்படுத்தும். 3டியின் நேரடியான காட்சி அனுபவம் அற்புதமாக இருக்கும். ஹாலிவுட்டில் முதலில் 2டியில் படமாக்கிவிட்டு பிறகு போஸ்ட் புரொடக்ஷனில் 3டியாக மாற்றுவார்கள். ஆனால் இந்தப் படம் 3டிகென உள்ள நவீன கேமராவில் நேரடியாக படமாக்கப்பட்டுள்ளது. இதனால் ஆக்ஷ்ன் காட்சிகள் நேரடி அனுபவத்தை நம் கண்ணுக்கு அருகில் கொண்டு வந்து தரும். இந்தப் படம் வெளிவந்த பிறகு நிறைய 3டி திரைப்படங்கள் வரும். தியேட்டர்கள் 3டி தொழில்நுட்பத்துக்கு மாறும் என்றார்.