‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
விஜய் மூன்று வேடங்களில் நடித்துள்ள படம் மெர்சல். தீபாவளிக்கு இந்த படம் திரைக்கு வருவதால், இறுதிகட்ட பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. பார்சிலோனா நாட்டுக்கு ஓய்வுக்கு சென்றுள்ள விஜய், முன்னதாகவே தனக்கான டப்பிங் வேலைகளை முடித்து விட்டார். அதோடு, படத்தின் முதல் பாதியை பின்னணி இசை இல்லாமலேயே பார்த்து விட்டு சென்றாராம்.
அவர் சென்றதை அடுத்து, மெர்சல் முதல் பாதிக்கு பின்னணி இசையமைக்கத் தொடங்கிய ஏ.ஆர்.ரகுமான் ஒரு வாரமாக இரவு பகல் என்று இடைவிடாமல் பின்னணி இசையமைக்கத் தொடங்கினாராம். அதையடுத்து தற்போது அவர் இரண்டாவது பாதி படத்திற்கான பின்னணி இசையில் பிசியாக இருக்கிறாராம்.
மேலும், இந்த படத்தில் விஜய்யின் ஒவ்வொரு வேடத்துக்கும் ஒவ்வொரு விதமான மியூசிக் ட்ராக் உருவாக்கியுள்ளாராம் ஏ.ஆர்.ரகுமான். அந்த ஒவ்வொரு ட்ராக்கிலும் சில புதுமையான இசைக்கருவிகளையும் பயன்படுத்தியிருக்கிறாராம்.