எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு | தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நெல்சன் | நாக சைதன்யா, பூஜா ஹெக்டேவை இயக்கும் விருபாக்ஷா இயக்குனர் | ஜூன் 13ல் வெளியாகும் ‛இந்தியன் 2' | தெலுங்கிற்கே முன்னுரிமை தரும் 'குபேரா' குழு | ஒரு அப்டேட் கூட வரவில்லை, வருத்தத்தில் அஜித் ரசிகர்கள் | இளம் இசையமைப்பாளர் பிரவீண் குமார் மரணம் | ஏப்ரல் மாதத்திலும் தொடர்ந்த ஏமாற்றம் - 2024 ஏப்ரல் படங்கள் ஓர் பார்வை | ‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா |
நடிகர் சிவாஜி கணேசனின் மணிமண்டப திறப்பு விழாவில் நடிகர் கமல் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், மாநில, தேசிய, ஆசிய எல்லைகளை கடந்தவர் நடிகர் சிவாஜி கணேசன். ஒருவேளை நான் நடிக்க வராமல் இருந்திருந்தால், என்னை உள்ளே அனுமதிக்கா விட்டாலும் வெளியில் ஒரு ரசிகனாக இருந்து இந்த விழாவில் கலந்து கொண்டிருப்பேன். எப்படியும், யார் தடுத்தாலும் இந்த மணிமண்டப திறப்பு விழாவிற்கு நான் வந்திருப்பேன்.
நடிப்பை கற்றுக்கொடுத்து என்னை போன்ற பலரின் வாழ்க்கையை மேம்படுத்திய கலைஞனுக்கு நன்றி செலுத்தும் விழா இது. யாரையும் கட்டாயப்படுத்தியோ, கெஞ்சியோ சிவாஜியை மதிக்க வைக்க முடியாது. எத்தனை முதல்வர்கள் வந்தாலும் இந்த கலைஞனை மதித்தே ஆக வேண்டும். கோடான கோடி ரசிகர்களின் மனதில் நிலைத்திருக்கக் கூடிய கலைஞர் சிவாஜி.
நடிக்க முயற்சிப்பவர்களுக்கும், முயற்சித்து தோற்றவர்களுக்கும் அவரே முன்னோடி. அத்தகைய கலைஞனுக்கு மணிமண்டபம் அமைத்து, விழா எடுத்த அரசுக்கும், அரசியலுக்கும் நன்றி என தெரிவித்துள்ளார்.