ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் |
ரீ-என்ட்ரியில் தெனாலிராமன், எலி ஆகிய படங்களில் நாயகனாக நடித்தார் வடிவேலு. ஆனால் அந்த படங்கள் எதிர்பார்த்தபடி வெற்றியை கொடுக்கவில்லை. அதையடுத்து கத்திச்சண்டையில் நடித்தபோது தண்ணியில கண்டம் படத்தை இயக்கிய சக்திவேல் இயக்கத்தில் நீயும் நானும் நடுவுல பேயும் என்ற படத்தில் ஆர்.கேவுடன் இணைந்து நடிக்கயிருந்தார்.
ஆனால், தான் நாயகனாக நடித்த முந்தைய இரண்டு படங்களும் தோல்வியடைந்ததால், அந்த படத்தில நடிக்க கொஞ்சம் தயங்கி வந்தார் வடிவேலு. அதோடு, ஏற்கனவே தன்னை வைத்து இம்சை அரசன் 24ஆம் புலிகேசி படத்தை இயக்கிய சிம்புதேவனும் தயாராகிக் கொண்டிருந்ததால், அந்த படத்தின் மீது பெரிய நம்பிக்கை வைத்திருந்த வடிவேலு, அந்த படத்திற்கு பிறகு நீயும் நானும் நடுவுல பேயும் படத்தை தொடங்கலாம் என்று கூறி விட்டாராம். அதனால், புலிகேசி-2 படப்பிடிப்பு முடிந்த கையோடு ஆர்கேவுடன் அவரை இணைத்து நீயும் நானும் நடுவுல பேயும் படத்தை இயக்கப்போகிறாராம் சக்திவேல்.