போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
காமெடியனாக சினிமாவில் நீண்டகாலம் நிலைத்து நின்றவர் வடிவேலு. ஒரு கட்டத்தில் காமெடி கதாநாயகனாக உயர்ந்தார். இம்சை அரசன் 23ஆம் புலிகேசி, இந்திரலோகத்தில் நா.அழகப்பன், தெனாலிராமன், எலி ஆகிய படங்களில் நாயகனாக நடித்தார். தற்போது இம்சை அரசன் 23ஆம் புலிகேசி படத்தின் இரண்டாம் பாகத்தில் நாயகனாக நடித்து வருகிறார்.
இந்த நிலையில், கத்திச்சண்டை படத்திற்கு பிறகு விஜய்யுடன் மெர்சல் படத்திலும் நடித்துள்ளார். இந்த படத்தில் ஒரு காமெடியனாக இல்லாமல் குணசித்ர ரோலில் நடித்திருக்கிறார் வடிவேலு. அதோடு, மெர்சலில் மேஜிக்மேனாக நடித்துள்ள விஜய்யுடன் இணைந்து, சில சீரியசான காட்சிகளிலும் நடித்திருக்கிறாராம். இந்த மாதிரியான காட்சிகளில் நடிக்கும்போது அவர் காமெடி செய்தால் அது ஒர்க்அவுட்டாகாது என்பதினால் தான் வடிவேலுக்கு இந்த படத்தில் காமெடி காட்சிகள் அவ்வுளவாக கொடுக்கப்படவில்லையாம்.