‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நேற்று திரைக்கு வந்துள்ள படம் ஸ்பைடர். மகேஷ்பாபு நாயகனாக நடித்துள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் ஒரே நாளில் வெளியாகியிருக்கிறது.
முருகதாஸ் அளித்துள்ள பேட்டி ஒன்றில், மகேஷ் பாபுவுடன் ஒர்க் பண்ண வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை. கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளாக திட்டமிட்டது இப்போது தான் நிறைவேறியுள்ளது. தமிழில் நான் விஜய்யை வைத்து இயக்கிய துப்பாக்கி கதையை மகேஷ் பாபுவுக்காகத் தான் எழுதினேன். ஆனால் அப்போது அவர் தெலுங்கு படங்களில் பிசியாக இருந்தார்.
அதையடுத்து அந்த கதையை விஜய்யிடம் சொல்லி ஓகே பண்ணி அவரை வைத்து இயக்கினேன். அதோடு, பின்னர் துப்பாக்கியை தெலுங்கில் மகேஷ்பாபுவை வைத்து ரீமேக் செய்ய நினைத்தேன். விஜய், தெலுங்கில் டப் செய்து வெளியிடுமாறு கூறியதால், அந்த ரீமேக் திட்டத்தை கைவிட்டு, துப்பாக்கியை டப்பிங் செய்து விஜய் படமாக ஆந்திராவில் வெளியிட்டேன் என்கிறார் முருகதாஸ்.